இனியொரு…
மாற்று அரசியல் என்பது அதிகார ஆசைகளின் சொல்லாடல் புனைவுகளாகிவிட்ட இத்தருணத்தில் ஒளிவுமறைவற்ற, மனக்கூச்சங்களற்ற ஒருதிறந்த பட்டவர்த்தமான உண்மையை நோக்கிய மாற்று அரசியலுக்கான உரையாடல்வெளியை உருவாக்குவதே எமது நோக்கம்.
{More»} செய்திகள்/ஆய்வுகள்
ஜனதிபதி; மஹிந்த சிந்தனையின் கீழ், வேறுவிதமான ‘சொகுசு இலங்கை’யை இன்று உருவாக்கி வருகிறார்: மங்கள சமரவீர»
சில மாதங்களில் ரி.எம்.வி.பி.யிலிருந்து தப்பியோடிய 70 க்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக செய்திகள்!»
இலங்கை அரசு வன்னிப் பகுதிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் தடுக்கிறது : அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு.»
பிரபாகரனை அழிக்கும் அதேநேரம், தெற்கில் இங்கு ஹிட்லர் ஒருவரை உருவாக்கிக் கொள்ள நாடு தயாராக இல்லை:ஜே.வி.பி.எம்.பி.பிமல் இரட்நாயக்க.»அரசியல் - சமுகம்
கணணி மென்பொருளே! கலியுக பரம்பொருளே!! : கலையரசன்» - :உங்கள் கருத்துக்கள் »
பத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன. அவற்றிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இருப்பதை மெருகூட்டவும் என அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தேவைப்பட்டனர். ஒரு பக்கம் இந்த புதிய தொழில்வாய்ப்புகளை நாடி கணிப்பொறி வல்லுனர்கள் படையெடுத்துக் கொண்டிருந்த போது, மறுபக்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய மென்பொருள் துணை கொண்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வந்தன.
புகலிட நாடுகளில் SLDF, INSA போன்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் இயங்குகின்றன. இவை நடுநிலைமை பக்கம் சாராத செயற்பாடு என்ற குரல்களில் தம்மை உருவத்தை உருமறைப்புச் செய்தபோதும் தமிழினவாத அமைப்புக்களாகவும் ஆசியப் பொது வளர்ச்சிப் போக்குக்கு எதிராக இலங்கையைச் சீரழிக்கும் அரசியலைச் செய்பவர்களாகவும் இருந்தன. இதில் உள்ள சிலர் ஒரு காலம் மனிதம், பல்லினக்கலாச்சாரம் எல்லாம் பேசியவர்களாகவும் ‘தேசியம் ஒரு கற்பிதம்” என்பதைக் கூடிக் கொண்டாடியவர்களுமாவர். ஆனால் இப்போது புலிப்பாசிசத்தை மறைக்க சிங்களப் பேரினவாதம் என்பதை உரக்கச் சொன்னார்கள். ஏகாதிபத்திய உலக யுத்தப் பயங்கரவாதத்தை மறைக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி பெருங்குரலெடுத்தனர். முழு இலங்கை மக்களையும் மேற்குலக நாடுகட்கு காட்டித் தரும் செயற்பாடுகளைச் செய்தனர்
சுதந்திர சுரண்டல் வலையம்:கலையரசன்»--1 Comment »
ஆகவே சுதந்திர வர்த்தக வலையத்தை முற்போக்கான தொழில்துறை புரட்சியாகவோ, அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சியாகவோ காண்பது அறிவீனம். அவை சந்தேகத்திற்கிடமின்றி மறுகாலனியாதிக்கத்தின் மறுவடிவமாகும்.காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலியாக, அல்லது நவகாலனித்துவ தொடர்ச்சியாக வெளிநாட்டு கடன், பொதுத் தேர்தல்கள் அமைந்துள்ளன. என்றோ ஒரு நாள் இந்த நாடுகள் தமது ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும் என்ற முன்நோக்கோடு பிரிட்டன் போன்ற நாடுகள் அப்போதே திட்டம் தீட்டியுள்ளன.
கார்ல்மார்க்ஸும் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும் : இந்திரா பார்த்தசாரதி»2 Comments »
கார்ல் மார்க்ஸ் ‘ தாஸ் காபிடல்’ என்ற மகத்தான நூலை லண்டனிலிருந்துகொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலகட்டத்தில் எழுதினார். ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். மார்க்ஸ் அவர் காலம் வரை நடந்த சரித்திர நிகழ்வுகளை வைத்துக் கொண்டு தம் கோட்பாடுகளை வரையறுத்தார். இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ அடையாளம், காலனி ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு புதிய கோலம் கொண்டது.
தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், இன்றைக்கு இலங்கையை பிணக்காடாக மாற்றியுள்ளது…இன்றைக்கும் இலங்கை பேரினவாத அரசால் பௌத்தர்களின் நாயகனாகப் போற்றப்பட்டு பள்ளிப்பாடப் புத்தகங்களையும் தபால்தலைகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த அனகாரிக்க தர்மபால என்ற மகாவம்சத்தின் நவீனகால வாரிசான இவர்தான் புதிய இலங்கையின் பௌத்த பேரினவாதத்தின் கர்த்தாவானார்
அறிவியல்
போராடும் பூமி» - உங்கள் கருத்துக்கள் »
1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரை அறிந்திருக்கிறோம். 1939 முதல் 1945 வரை நடந்து முடிந்த இரண்டாம் உலகப்போரை தெரிந்திருக்கிறோம். போர் என்றால் பாதிப்பு. போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமல்ல. உலகிற்கே பாதிப்பு.
போர் என்பது இன்று நடைபெறும் ஒன்றல்ல. காலம் காலமாக வரலாற்றில் ஏற்படும் சிவப்பு பதிவுகள். கல், கத்தி கொண்டு போரிட தொடங்கிய மனிதன், வில் அம்பு என முன்னேறினான். காலால் படை, குதிரைப்படை, யானைப்படை என ..
இலக்கியம்
கைலாசபதியின் தளமும் வளமும்:ஹெச்.ஜி. ரசூல்» - உங்கள் கருத்துக்கள் »
மார்க்சிய அறிஞர் கைலாசபதியை முன்வைத்து ஒரு தேடல் நிகழ்ந்துள்ளது. கைலாசபதி: தளமும் வளமும் ஆய்வு நூல் பதினாறு ஆய்வாளர்களின் கட்டுரைகளாக தோற்றம் கொண்டுள்ளது. திறனாய்வு முறையியல், செயல்முறை விமர்சனம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இன தேசியவாதம், சாதியம், மொழிக் கட்டமைப்பு, சமுதாயவியல், மார்க்சியம் எனப் பன்முகப்பட்ட விவாதங்களை இத்தொகுப்பு மறுவாசிப்பு செய்ய முயல்கிறது.
கைலாசபதியின் முக்கியத்துவமும், அவர் மீது சுமத்தப்பட்ட மாற்று விமர்சனங்களும் அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. […]
மாக்சிசத்தின் தோற்றத்துடனும் லெனினிசத்தின் வளர்ச்சியின் ஊடாகவும் கலை இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவு பற்றிய தெளிவு விரிவு பெற்றது. 1917ன் ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியும் அதற்குப் பின்னான சீனப்புரட்சி உட்பட்ட சமூக மாற்றத்திற்காக இடம் பெற்ற புரட்சிகளில் விடுதலைப் போராட்டங்களில் எல்லாம் கலை இலக்கியம் வகித்த பாத்திரமும் பங்களிப்பும் உலகறிந்ததாகும்.
மாற்று சினிமா
மூன்று ஆப்ரிக்கக் குறும்படங்கள் :யமுனா ராஜேந்திரன்» - உங்கள் கருத்துக்கள் »
ஆப்ரிக்க மக்களது தனிப்பட்ட வாழ்வும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட சமூக அரசியல் பிரச்சினைகளும் இந்திய இலங்கைச் சமூகத்தவர்களுக்கு நிறைய பொதுத்தன்மைகள் கொண்டது. கூட்டுக்குடும்பம், குடும்பத்தில் பெண்ணின் மையமான இடம் போன்றன இரு சமூகங்களுக்கும் பொதுவானது. மத ஆதிக்கத்தினால் பெண் ஒடுக்குமுறை அதி அளவில் இரு சமூகங்களிலும் இருக்கிறது. அரசியலில் காலனியாதிக்கம் இரு நாடுகளுக்கும்; பொதுவானது. ஆதிகார வர்க்கத்தவரின் கொடுமைகள், எங்கெங்கிலும் தலைவிரித்தாடும் ஊழல், வறுமை போன்றனவும் இரு சமூகங்களுக்கும் பொதுவானது. இந்தப் பொதுத் தன்மைகளினால் ஆப்ரிக்கத் திரைப்படங்களை அனுபவம் கொள்வதென்பது எமது அண்டை வீட்டுமனிதரின் சுகதுக்கங்களில் பங்குபெறுவது போலும் இருக்கிறது.










தமிழீழ விடுத்லைப் புலிகளைத் தேசியத்தின் பேரால் வளர்த்தெடுத்து இலங்கைத் தீவை இந்து சமுத்திரத்தின் இரத்த்துளியாக்கி வேடிக்கை பார்க்கும் இதே யாழ் மேட்டுகுடி மேலாதிக்கம் தான் இன்று சுதந்திர வர்த்தக வலையத்தை சொர்க்க புரியாகக் காட்ட முனைகிறது.இந்த ஏகதிபத்திய சார் வர்க்கத்திற்கெதிராகவும் அதன் பிரதிநிதிகளான தமிழ் சிங்கள மேல்தட்டு அதிகார சக்திகளுகெதிராகவும் இலங்கைத் தொழிலாளர்களினதும் இடது சாரிகளதும் ஒருங்கிணைந்த போராட்டம் இன்றைய அவசர கடமையாகும்